வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத...
வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலையே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்கள் , தண்டப்பணம் செலுத்த முடியாததால் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் உள்ளிட்டவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.டி.ஹேரத் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் கைகொடுத்து சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.