யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.