ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயல...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை உயர்மட்ட குழு, அந்த நாட்டு பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிய வருகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
பாரத பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் – 200 தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மலையகம் – 200 நிகழ்வுக்கு இந்திய பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்படும் என தெரியவருகின்றது.