தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் ...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் போது பொலிஸ் வாகனத்தில் காண்டீபன் மற்றும் சட்டத்தரணியும் சென்ற விடயம் தொடர்பில் விசிதரன் முகநூலில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பிணைியில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில் முகநூலில் குறித்த நபர் வெளியிட்ட கருத்து,
கஜேந்திரகுமார் அவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் பொலிஸ் வாகனத்திலே சட்டத்தரணி காண்டீபன் உடன் செல்கின்றார், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டது தொடர்பாக எந்த ஒரு செய்திகளையோ, பதிவுகளையோ சட்டத்தரணி காண்டீபன் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் பொலிஸ் வாகனத்தில் கைது செய்யப்பட்டவருடைய சட்டத்தரணியும் சேர்ந்து சென்ற சந்தர்ப்பம் இதுவரை நடந்ததும் இல்லை, யாரும் அறிந்ததும் இல்லை.
இப்போது இருக்கிற கேள்வி என்ன என்றால் காண்டீபன் என்ன அடிப்படையில் பொலிஸ் வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் இணைந்து சென்றார்.
இலங்கை சட்டத்தில் ஏதும் மாற்றம் வந்திட்டா? ஏன் கேட்கிறன் என்றால் அடுத்தமுறை யாரும் தமிழ் தேசிய வாதிகள் கைது செய்யப்படும் போது அதே வாகனத்தில் யாரும் ஒரு சட்டத்தரணியை அனுப்பி வைக்கத்தான் வேறு ஒன்றும் இல்லை என பிரித்தானியாவில் வாசிக்கும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட விசிதரன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.