ரஷ்ய ஜனாதிபதியுடன், 'கரம்கோர்ப்பதாகவும்', நாட்டை சக்திவாய்ந்ததாக்கும் இலக்கிற்காக, திட்டமிட்ட செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படு...
ரஷ்ய ஜனாதிபதியுடன், 'கரம்கோர்ப்பதாகவும்', நாட்டை சக்திவாய்ந்ததாக்கும் இலக்கிற்காக, திட்டமிட்ட செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும், வடகொரிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அந்நாட்டு அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தேசிய தினத்தையொட்டி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு கிம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
குறித்த செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான ரஷ்யா ஜனாதிபதியின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாகவும், ரஷ்யாவிற்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கிம் உறுதியளித்துள்ளார்.
'நீதி வெற்றி பெறுவது உறுதி என்றும், வெற்றி வரலாற்றிற்கு ரஷ்ய மக்கள் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்', என்றும் கிம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் நெருக்கமான திறன் வாய்ந்த ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கும் கிம், இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, தத்தம் நாடுகளை சக்தி வாய்ந்த நாடாக கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற, ரஷ்ய ஜனாதிபதி உறுதியாக கரம் கோர்ப்பதாக அவர் தெரிவித்ததாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதேச்சதிகார மற்றும் மேலாதிக்க கொள்கைகளை குற்றச்சாட்டியுள்ள வட கொரியா, கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்த பின்னரும் அந்நாட்டை ஆதரித்து நெருக்கமான நட்புறவை ஏற்படுத்த முயற்சித்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது.
இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்ளன.
இந்நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ரஷ்யாவிற்கு ஆதரவளித்திருப்பது உலக நாடுகளுக்கு முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.