ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உத்தியோகபூர்வ விஜயமாக நாளைய தினம் இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக 28 மற்று...
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உத்தியோகபூர்வ விஜயமாக நாளைய தினம் இலங்கை வரவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்கள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் சந்திக்க உள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு அமைச்சர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
மே மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து இந்த விஜயமானது இரு தரப்பும் இடையில் மிக முக்கிய சந்திப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.