தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அம...
தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இந்தக் கடன் திட்டத்தின் கீழ் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது, தொழிற்கல்வி பாடநெறிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.