சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949 ஆம் ஆண்டு தாய்வான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தாய்வானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்...
சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949 ஆம் ஆண்டு தாய்வான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தாய்வானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது.
அதன் ஒரு பகுதியாக தாய்வான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் தாய்வானுடன் வேறு எந்த நாடுகளும் உத்தியோகப்பூர்வ உறவு வைத்து கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே தாய்வானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை தாய்வானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இதன்மூலம் தாய்வானை தனது வெடிமருந்து கிடங்காக அமெரிக்கா மாற்றி விட்டதாக சீனா குற்றச்சாட்டியது.
மேலும் அமெரிக்காவின் இந்த இராணுவ உதவிகள் தாய்வானை ஒன்றிணைக்கும் தனது விருப்பத்தை எந்த விதத்திலும் தடுக்காது என சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது.