முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழியின் இன்றைய அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதன்படி, இன்றைய தின...
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழியின் இன்றைய அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதன்படி, இன்றைய தினம் சுமார் 13 பேரின் சடலங்கள் என அடையாளப்படுத்தக்கூடிய எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்டையோடு, பற்கள் உள்ளிட்ட மனித எச்சங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பெண்களின் உள்ளாடைகள் மற்றும் ஆடைகள் பலவும் கிடைத்துள்ளன.
அடையாளம் காணப்பட்ட எச்சங்கள் பாதுகாப்பான முறையில் மூடி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.