பதின்ம வயது திருமணத்தை பற்றி பேசும் "சேறு" என்கிற ஈழத்து குறும்படம் ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு சாவகச்சேரி ...
பதின்ம வயது திருமணத்தை பற்றி பேசும் "சேறு" என்கிற ஈழத்து குறும்படம் ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு சாவகச்சேரி "பாலா" திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
குறித்த குறும்படத்தை மூன்று பாடசாலையில் திரையிட்டத்தாகவும் அனைத்து பாடசாலை மாணவர்களும் இதனை பார்க்கவேண்டும் என்ற படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.
லிப்ஸிஜாவின் இயக்கத்தில் வெளியாகவுள்ள குறும்படத்தில் ஒளிப்பதிவை சசிகரன் யோவும் இசையை பிரசாந் கிருஸ்ணபிள்ளையும் ஒளியமைப்பை ஜெனிஸ்ரனும் ஒப்பனையை டேறியனும் கலை இயக்குநராக ஜொனாத்தும் படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு மேற்ப்பார்வையை விமல்ராஜ்ம் ஆங்கில உபதலைப்பை சர்மிலக்சனும் பின்னணி குரலை தமிழரசி,சிவராசா ஆகியோரும் மேற்கொண்டர்.
குறும்படத்தில் நடிகர்களாக துர்க்கா மகேந்திரன், டேறியன், டினேஸ், ஜொனாத்,கஜனி,சுபாஷினி,புஸ்பராணி,அம்பலம் பணியாற்றினர்.