யாழ் மாநகர சபை மற்றும் பிரதேச சபை தரிப்பிடங்களில் இருந்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயம் மீட்டர் அவசியம் என யாழ் மாவட்ட அ...
யாழ் மாநகர சபை மற்றும் பிரதேச சபை தரிப்பிடங்களில் இருந்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயம் மீட்டர் அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்தார்.
அதாவது யாழ்பாணத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டி செயலியில் பதிவு செய்யப்பட்ட மூச்சக்கர வண்டிகள் மீட்டர் பொருத்த தேவையில்லை என்ற கருத்துக்கள் எழுந்த நிலையில் அது தொடர்பில் அவரிடம் வினவியை போதே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு விரும்பினால் செயலி பொருத்தலாம் பொருத்தாமல் விடலாம் அதை பற்றி நாம் அக்கறை செலுத்த மாட்டோம்.
ஆனால் யாழ் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இடங்களில் இருந்து முட்சக்கர வண்டி சேவைகளில் ஈடுபடுவோர் கட்டாயம் மீட்டர் பொருத்தி பொலிஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும்.
இவ் நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராகப் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.