உடும்பிராயில் வீடு உடைத்து பொருட்கள் திருடிய மூவர் கோப்பாய் பொலிசாரினால் கைது! ஏழு லட்சம் ரூபாய் பொருட்களும் மீட்பு. கோப்பாய் போலீஸ் பிரிவு...
உடும்பிராயில் வீடு உடைத்து பொருட்கள் திருடிய மூவர் கோப்பாய் பொலிசாரினால் கைது! ஏழு லட்சம் ரூபாய் பொருட்களும் மீட்பு.
குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்த கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதோடு குறித்த வீட்டில் திருடப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளார்கள்
கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் உடும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் இருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்பட்டுள்ளதோடு தலைமறை வாகியுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து
விலையுயர்ந்த தொலைக்காட்சி மின்மோட்டர் மடிக்கணினி மற்றும் பெறுமதியான தொலைபேசி
தோடு பெறுமதியான மணி கூடு என்பன மீட்க்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,