இலங்கை கடற்படையினரால் 2023 டிசம்பர் 08 ஆம் திகதி பத்தனங்குண்டுவ தீவுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது புத்தளம் த...
இலங்கை கடற்படையினரால் 2023 டிசம்பர் 08 ஆம் திகதி பத்தனங்குண்டுவ தீவுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது புத்தளம் தடாகத்தின் ஆழத்தில் இருந்து 04 கிலோவிற்கும் அதிகமான தங்கம் பொதி மீட்கப்பட்டது. பெறுமதியான தங்கம், கடத்தல்காரர்களால் வேண்டுமென்றே நீருக்கடியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் 02 சந்தேக நபர்களும், 01 டிங்கி படகுகளும் மோசடியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழிகள் ஊடாக நிகழும் மோசமான செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில், கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றது.
இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக, வடமேற்கு கடற்படை கட்டளையிலுள்ள SLNS விஜயா, டிசம்பர் 08 ஆம் திகதி பத்தனங்குண்டுவ தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, புத்தளம் தடாகத்தின் ஆழத்தில் இருந்து கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை மீட்டுள்ளனர். இதனையடுத்து, 04 கிலோவுக்கும் அதிகமான தங்கம் அடங்கிய பொதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே தங்கத்தை கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதேவேளை, 02 நபர்களை கடற்படையினர் கைது செய்ததுடன், மோசடியுடன் தொடர்புடையதாக கருதப்படும் 01 டிங்கி படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 மற்றும் 35 வயதுடைய கல்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கம் மற்றும் டிங்கி படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.