பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம், அவருக்கு எத...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அஹ்னாஃப் ஜசீம் தனது ‘நவரசம்’ புத்தகத்துடன் தொடர்புடைய தீவிரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார்.
சிறுவர்களிடம் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவித்ததாகவும், தனது இலக்கியப் பணியின் மூலம் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக PTA இன் கீழ் கைது செய்யப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு நவம்பரில் புத்தளம் உயர் நீதிமன்றத்தில் அவர் கற்பித்த எக்ஸலன்ஸ் பாடசாலை மாணவர்களிடம் தீவிரவாத பேச்சுக்களை நிகழ்த்தியதாக ஜஸீம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
எவ்வாறாயினும், கிட்டத்தட்ட 19 மாத காவலுக்குப் பிறகு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் டிசம்பர் 2021 இல் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.