குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இருந்து கடத்தல்காரர் ஒருவரின் 280 மில்லியன் ரூபாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றி...
குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இருந்து கடத்தல்காரர் ஒருவரின் 280 மில்லியன் ரூபாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள் இருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், கெப் ரக வாகனம் ஒன்றும் மற்றும் வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரை விசாரிக்க குருநாகல் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.