பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு ஏப்ரல் 21 குண்டுதாக்குதலுடன் தொடர்பு உண்டு எனும் கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட மு...
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு ஏப்ரல் 21 குண்டுதாக்குதலுடன் தொடர்பு உண்டு எனும் கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகச் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பிள்ளையானிடம் தற்போது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவில் விசாரணை மேற்கொள்கின்றனர்.
தடுப்புக்காவலில் உள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்த சட்டத்தரணி உதய கம்மன்பில அரை மணிநேரம் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.