இன்று வரையான காலப்பகுதியில் செம்மணியில் 115 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து ...
இன்று வரையான காலப்பகுதியில் செம்மணியில் 115 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்டத்தின் 25ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் இடம்பெற்றன.
இந்நிலையில் இன்றையதினம் 4 புதிய எலும்பு தொகுதிகள் அகழ்வு பிரதேசம் ஒன்றில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் இன்றையதினம் மூன்று மனித எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன.