நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான க...
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்பெரில் நேற்று (15) மாலை வத்தளை, பங்களாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் 309 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான இருவரும் க்ராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதானவர்கள் என தெரிய வந்துள்ளது.
வாடகை வீடொன்றின் அறையிலேயே இக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.