முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞன் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நிலையில், தப்பியோடி, குளத்தில் மூழ்கி உயிர...
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞன் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நிலையில், தப்பியோடி, குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இடதுகரை, ஜீவநகர் பகுதியிலுள்ள சிங்கப்படைப்பிரிவின் 12வது பற்றாலியனை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.இளைஞர்களை தாக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 3 சிப்பாய்களும் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து , இன்று கைது செய்யப்பட்ட 4 சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.