சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி. #IPL2019 #CSKvKXIP டு ...
சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி. #IPL2019 #CSKvKXIP
டு பிளசிஸ், டோனி அதிரடி - பஞ்சாப் அணி வெற்றி பெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 56 ஆக இருக்கும்போது வாட்சன் 26 ரன்னில் அவுட்டானார்.
சிறிது இடைவெளிக்கு பிறகு ஆடிய டு பிளசிஸ் தனது அதிரடி ஆட்டத்தால் அரை சதமடித்தார். அவர் 38 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 20 ரன்னில் வெளியேறினார்.
அப்போது சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.
அவரை தொடர்ந்து இறங்கிய அம்பதி ராயுடுவும் டோனியும் நிதானமாக ஆடினர். கடைசியில் டோனி அதிரடியாக ஆடினர்.
இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.
இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. டோனி 37 ரன்களுடனும், ராயுடு 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பஞ்சாப் அணி சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். #IPL2019 #CSKvKXIP

டு பிளசிஸ், டோனி அதிரடி - பஞ்சாப் அணி வெற்றி பெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 56 ஆக இருக்கும்போது வாட்சன் 26 ரன்னில் அவுட்டானார்.
சிறிது இடைவெளிக்கு பிறகு ஆடிய டு பிளசிஸ் தனது அதிரடி ஆட்டத்தால் அரை சதமடித்தார். அவர் 38 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 20 ரன்னில் வெளியேறினார்.
அப்போது சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.
அவரை தொடர்ந்து இறங்கிய அம்பதி ராயுடுவும் டோனியும் நிதானமாக ஆடினர். கடைசியில் டோனி அதிரடியாக ஆடினர்.
இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.
இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. டோனி 37 ரன்களுடனும், ராயுடு 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பஞ்சாப் அணி சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். #IPL2019 #CSKvKXIP