தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை நாடிபிடித்தறியும் நோக்கத்துடன் யாழ்ப்பாணத்திற்கு இன்று நாமல் ராஜபக்ச பயணம் மேற்கொண்டுள்ளார். மைத்திரி முகாமிலிர...
தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை நாடிபிடித்தறியும் நோக்கத்துடன் யாழ்ப்பாணத்திற்கு இன்று நாமல் ராஜபக்ச பயணம் மேற்கொண்டுள்ளார். மைத்திரி முகாமிலிருந்த அங்கஜன் இராமநாதன், மஹிந்த முகாமிற்கு தாவி, நாமலின் முழுமையான பயண ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கை. சிறுபான்மையின வாக்குகளின் அவசியத்தை உணர்ந்துள்ள மஹிந்த தரப்பு, நாமலின் மூலம் தமிழ் தரப்புக்களை அணுகுகிறது.
தமிழ் மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ளப் போகிறேன் என்றே சந்திப்பிற்கான தகவல் நாமல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று யாழ் ஆயர், நல்லூர் ஆதின குரு முதல்வர், யாழ் நாகவிகாரை, முஸ்லிம் மக்கள், விளையாட்டு கழகங்கள், யாழ் வணிகர் கழகம் என்பவற்றுடன் நாமல் சந்திப்பில் ஈடுபடுவார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கை. சிறுபான்மையின வாக்குகளின் அவசியத்தை உணர்ந்துள்ள மஹிந்த தரப்பு, நாமலின் மூலம் தமிழ் தரப்புக்களை அணுகுகிறது.
தமிழ் மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ளப் போகிறேன் என்றே சந்திப்பிற்கான தகவல் நாமல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று யாழ் ஆயர், நல்லூர் ஆதின குரு முதல்வர், யாழ் நாகவிகாரை, முஸ்லிம் மக்கள், விளையாட்டு கழகங்கள், யாழ் வணிகர் கழகம் என்பவற்றுடன் நாமல் சந்திப்பில் ஈடுபடுவார்.