சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளில், இலங்கையில் அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளில், இலங்கையில் அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியாவில் இன்று (30) இடம்பெற்றது.
வவுனியா பன்றிக்கெய்த குளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக சென்றனர்.
யுத்தத்தின் இறுதியில் வன்னியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் அந்த இடத்திலேயே தரம் பிரிக்கப்பட்டு, விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்டவர்கள் தனியாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் பலர் பின்னர் வீடு திரும்பியிருக்கவில்லை. அவர்களிற்கு என்ன நடந்தது என்பதையும் அரசு வெளியிடவில்லை.
அந்த இடத்தில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆரப்பட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், தமது காணாமல் போன உறவினர்களை ஒப்படைக்குமாறும், அரசு நீதியை தர வேண்டும், ஓஎம்பி வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு வடக்கின் அனைத்து பகுதிகளில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திரண்டு வந்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், ச.சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, ப.சத்தியலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடக செயலாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பன்றிக்கெய்த குளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக சென்றனர்.
யுத்தத்தின் இறுதியில் வன்னியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் அந்த இடத்திலேயே தரம் பிரிக்கப்பட்டு, விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்டவர்கள் தனியாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் பலர் பின்னர் வீடு திரும்பியிருக்கவில்லை. அவர்களிற்கு என்ன நடந்தது என்பதையும் அரசு வெளியிடவில்லை.
அந்த இடத்தில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆரப்பட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், தமது காணாமல் போன உறவினர்களை ஒப்படைக்குமாறும், அரசு நீதியை தர வேண்டும், ஓஎம்பி வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு வடக்கின் அனைத்து பகுதிகளில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திரண்டு வந்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், ச.சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, ப.சத்தியலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடக செயலாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.