தெல்லிப்பளையில் கதிர்வீச்சு கழிவுகளா? – மருத்துவ ஆய்வு

தெல்லிப்பளையில் கதிர்வீச்சு கழிவுகளா? – மருத்துவ ஆய்வு

அண்மைக் காலத்தில் வடமாகாணத்தின் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இலங்கையின் பிற மாவட்டங்களில் உள்ள குறிப்பாக அநுராதபுரம் மற்றும் வவுனியா போன்ற பி...

அண்மைக் காலத்தில் வடமாகாணத்தின் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இலங்கையின் பிற மாவட்டங்களில் உள்ள குறிப்பாக அநுராதபுரம் மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மனிதக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதாகவும் அதனால் அப்பிரதேசத்தில் பெரும் சுகாதாரச் சீர்கேடு உருவாகலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது.



தேர்தல் காலம் நெருங்குவதால் அரசியல்வாதிகள் பலர் தமது அறிவுக்கு எட்டிய வகையில் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். உண்மையில் என்னதான் நடக்கின்றது என்பதை இப்பத்தி ஆராய்கின்றது.

வைத்தியசாலைக் கழிவுகள் பற்றி ஏன் நாம் அதீத அக்கறை கொள்ளவேண்டும் என்றால் இக்கழிவுகளினால் வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள், நோயாளியாக தங்கி இருப்பவர்கள், இக்கழிவுகளை கையாளுபவர்கள் மற்றும் இக்கழிவுகள் கொட்டப்படும் சூழலில் வாழுபவர்கள் என பலருக்கும் நோய்க் கிருமித்தாக்கத்தினை உண்டு பன்னவல்லன.



மேலும் இவற்றில் உள்ள உக்கி அழியாத கழிவுகள் மற்றும் கூர்மையான கழிவுகள் போன்றவற்றினால் சூழலுக்கு பெரும் ஆபத்துவிளையும். முக்கியமாக வைத்தியசாலை கழிவுகளை உரியமுறையில் முகாமைத்துவம் செய்து இல்லாமல் அழிப்பதற்கு பெருமளவு பணம் செலவாகும்.



வைத்தியசாலை, மருத்துவ நிலையம் மற்றும் ஆய்வுகூட நிலையம் என்பன இயங்கும் பொழுது அவற்றில் இருந்து பல்வேறுபட்ட கழிவுப் பொருள்கள் உருவாகும்.

அந்தக் கழிவுகள் யாவும் ஒட்டுமொத்தமாக வைத்தியசாலை கழிவுகள் என்றழைக்கப்படும். இக்கழிவுகள் இருவகைப்படும்.

ஆபத்தற்ற கழிவுகள் (Non-hazardous /General waste)
ஆபத்தான கழிவுகள் (hazardous waste)
ஆபத்தற்ற கழிவுகள் எனப்படும் பொழுது நோயாளியின் கிருமித்தொற்று சாத்தியக்கூறு அற்ற அதாவது நோயாளியின் குருதி, சிறுநீர், உடல் திரவங்கள் போன்றனவற்றுடன் தொடுகையுறாத சாப்பாட்டுக் கழிவுகள், துணி, கடதாசி போன்றன உள்ளடங்குகின்றது.

இந்தக் கழிவுகளை அப்பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களே எவ்விதமான பயமும் இன்றி கழிவு அகற்றலாம்.

ஆபத்தான கழிவுகள் எனப்படுவனவற்றால் மனிதர்களுக்கும் சூழலுக்கும் பெருமளவு தீங்கு உண்டாகும்.

உலக சுகாதார நிறுவனமானது இக்கழிவுகள் எவை என்பதையும் அவை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படவேண்டும் என்பதையும் வரையறுத்துள்ளது. இனி அவற்றினை பார்ப்போம்.



கிருமித் தொற்றுச் சாத்தியம் உள்ள கழிவுகள் – இவற்றில் நோயாளியின் குருதி, மலம், சலம் போன்ற கழிவுகள் உள்ளடங்கும்.
மனிதஉடற்கழிவுகள்- இதில் சத்திர சிகிச்சை கூடத்தில் இருந்து அகற்றபடும் உடல்பாகங்கள், உடற்கூற்றாய்வு பரிசோதனையில் அகற்றப்படும் கழிவுகள், இறந்த குறைமாத சிசுக்கள், தொப்புள்கொடி போன்ற உள்ளடங்கும்.
கூர்மையான கழிவுகள் – இதில் பாவிக்கப்படும் சத்திரசிகிச்சை பிளேட்டுகள், ஊசிகள், உடைந்த கண்ணாடி போத்தல்கள் போன்றன உள்ளடங்கும்.
இரசாயனக்கழிவுகள் – இவ்வகை கழிவுகள் வைத்தியசாலையில் மற்றும் ஆய்வுகூடங்களில் பாவிக்கப்பட்ட பல்வேறு இரசாயன பதார்த்தங்களினைக் குறிக்கும்
மருந்துக்கழிவுகள் – இதில் பாவிக்கப்பட்ட மருந்துகள், காலாவதியான மருந்துகள் போன்றன உள்ளங்கும்
கதிர்வீச்சு கழிவுகள் – இதில் புற்றுநோயாளிகளுக்கு பாவிக்கப்படும் கதிர்வீச்சு சக்தியுள்ள மருந்துகள், அவற்றின் கொள்கலன்கள், அவ்வாறான மருந்துகளை உட்கொண்ட நோயாளிகளின் மலம், சலம் போன்றன உள்ளடங்கும்.
இனி முக்கியமான விடயத்திற்கு வருவோம் அவ்வாறாயின் எவ்வகையான கழிவுகள் தெல்லிப்பளை வைத்தியசாலை மருத்துவக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன?



இங்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, வவுனியா மாவட்ட வைத்தியசாலை மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை போன்றவற்றில் இருந்து ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுகின்றன.

இவற்றில் முக்கியமாக அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் இருந்து புற்றுநோயாளர் பாவித்த மருந்துக் கழிவுகள் அதாவது கதிர்வீச்சுள்ள கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் பொருட்டு இங்கு கொண்டுவரப்படுகின்றன.

இதுதவிர தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோயாளரின் கழிவுகளும் இங்குதான் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது.
ஏன் தெல்லிப்பளைக்கு கொண்டுவரப்படுகின்றது என்று பார்ப்போம்.




இந்தக் கழிவுகளை எரித்து அழித்து முற்றாக சாம்பராக்கும் incinerator என்ற உபகரணம் தெல்லிப்பளையில் உள்ளமையேயாகும்.

அவ்வாறாயின் மேற்குறிய வைத்தியசாலைகளில் இந்த உபகரணம் இல்லையா என்றால் யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலையில் மேற்குறித்த உபகரணம் உள்ளது. ஆனால் அதன் வினைத்திறன் போதாமையினாலேயே மேலதிக கழிவுகள் தெல்லிப்பளைக்குக் கொண்டுவரப்படுகின்றன.

அதாவது முக்கியமாக அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து புற்றுநோயாளர் பாவித்த மருந்துக் கழிவுகள் அதாவது கதிர்வீச்சுள்ள கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் பொருட்டு இங்கு கொண்டுவரப்படுகின்றது.

Incinerator இன் கொள்ளளவு அல்லது வினைத்திறன் என்பது குறித்த வகைகழிவுகளை ஒருநாளில் எத்தனை கிலோகிராம் எரிக்கலாம் என்பதே ஆகும். வழமையாக தெல்லிப்பளையில் உள்ள Incinerator ஆனது 12 மணித்தியாலங்களே வேலை செய்கின்றதோடு நாளாந்தம் 1200-1600 கிலோ கிராம் வரையான கழிவுகள் எரிக்கப்படுகின்றன.

இந்த அளவினை மீறிவரும் கழிவுகளே பெரும்பாலும் வெளியில் தேக்கிவைக்கப்படுகின்றது. அவற்றில் முக்கியமாக கதிர்வீச்சு கழிவுகள் காணப்படுகின்றன.


இவை தகுந்த முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக சூழலுக்கும் அருகில் உள்ள மனிதர்களுக்கும் நிச்சயம் தீங்கு ஏற்படும்.

மேலும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் காணப்படும் Incinerator ஆனது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழேயே பராமரிக்கப்படுகின்றது.

அங்கிருந்தே தேவையான டீசல் மற்றும் ஊழியர் போன்றோர் வந்து இயக்குகின்றனர். இங்கு முக்கியமான இன்னொரு விடயம் யாதெனில் இவர்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாட்டினை மேற்பார்வை செய்ய தகுதிவாய்ந்த ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே அரைகுறையாக எரிந்த மருந்துக் கழிவுகள் அருகில் குவித்துவைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கு வேலை செய்யும் ஊழியர் போதிய அளவு டீசலினை பயன்படுத்தாததன் காரணமாகவே கழிவுகள் அரைகுறையாக எரிந்துள்ளன.

இது சம்பந்தமாக உரியதரப்புகளும் மக்களுக்கு தெளிவுபடுத்த தவறிவிட்டனர்.



எனவே மக்கள் மத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த விவகாரத்துக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண்பது அவசியம்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,112,Astrology,30,cinema,263,doctor,13,Gallery,130,india,415,Jaffna,3671,lanka,9143,medical,7,Medicial,39,sports,378,swiss,15,technology,80,Trending,4512,Videos,10,World,629,Yarlexpress,4339,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தெல்லிப்பளையில் கதிர்வீச்சு கழிவுகளா? – மருத்துவ ஆய்வு
தெல்லிப்பளையில் கதிர்வீச்சு கழிவுகளா? – மருத்துவ ஆய்வு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD_bX4s5UwS3S9o9M6tdh13gzQAUQBfX_-a28yyCBFDsCFCH0BzcXVsOwJTs5weGLh-t-sWvceinvSasMCm2shu2efeETBQqi-qpI386_gqSSRfReOnrNPz9nJNAaEn8Sw_edu70wZgr8/s640/fere.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD_bX4s5UwS3S9o9M6tdh13gzQAUQBfX_-a28yyCBFDsCFCH0BzcXVsOwJTs5weGLh-t-sWvceinvSasMCm2shu2efeETBQqi-qpI386_gqSSRfReOnrNPz9nJNAaEn8Sw_edu70wZgr8/s72-c/fere.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2019/08/blog-post_64.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/08/blog-post_64.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content