பற்றி எரியும் அமேசன் காட்டுத்தீயை அணைப்பதற்காக, பொலிவியா ஜனாதிபதி நேரடியாக களத்தில் இறங்கினார். தீயணைப்பு வீரராக அவரும் செயற்பட்டார். அமேச...
பற்றி எரியும் அமேசன் காட்டுத்தீயை அணைப்பதற்காக, பொலிவியா ஜனாதிபதி நேரடியாக களத்தில் இறங்கினார். தீயணைப்பு வீரராக அவரும் செயற்பட்டார்.
அமேசன் மழைக்காடுகளின் பெரும்பாலான பகுதி, பிரேசிலில் இருந்தாலும் அண்டை நாடுகளான பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட 8 நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்த நிலையில், அமேசனில் பற்றி எரியும் காட்டுத் தீயானது பொலிவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிகுய்தானியா பிராந்தியத்திலும் எரிந்து வருகிறது. பொலிவியா எல்லைக்குட்பட்ட அமேசன் காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 10 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துவிட்டன.
காட்டுத்தீயை அணைக்க, பொலிவியா அரசு அமெரிக்காவிடம் இருந்து சூப்பர் டாங்கர் என்று அழைக்கப்படும் ‘போயிங் 747’ விமானத்தை குத்தகைக்கு வாங்கி இருக்கிறது. மேலும் இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பொலிவியா ஜனாதிபதி ஈவோ மெரேலஸ் சிகுய்தானியா பிராந்தியத்துக்கு நேரில் சென்று, தீயணைக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது, பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டு அவரும் தீயணைக்கும் பணியில் களம் இறங்கினார்.
அதனை தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஈவோ மெரேலஸ், தீயணைப்பு பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையில் சிகுய்தானியா பிராந்திய காட்டுத்தீயில் 90 சதவீதம் அதிகமானவை அணைக்கப்பட்டு விட்டதாக ஈவோ மெரேலஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமேசன் மழைக்காடுகளின் பெரும்பாலான பகுதி, பிரேசிலில் இருந்தாலும் அண்டை நாடுகளான பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட 8 நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்த நிலையில், அமேசனில் பற்றி எரியும் காட்டுத் தீயானது பொலிவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிகுய்தானியா பிராந்தியத்திலும் எரிந்து வருகிறது. பொலிவியா எல்லைக்குட்பட்ட அமேசன் காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 10 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துவிட்டன.
காட்டுத்தீயை அணைக்க, பொலிவியா அரசு அமெரிக்காவிடம் இருந்து சூப்பர் டாங்கர் என்று அழைக்கப்படும் ‘போயிங் 747’ விமானத்தை குத்தகைக்கு வாங்கி இருக்கிறது. மேலும் இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பொலிவியா ஜனாதிபதி ஈவோ மெரேலஸ் சிகுய்தானியா பிராந்தியத்துக்கு நேரில் சென்று, தீயணைக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது, பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டு அவரும் தீயணைக்கும் பணியில் களம் இறங்கினார்.
அதனை தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஈவோ மெரேலஸ், தீயணைப்பு பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையில் சிகுய்தானியா பிராந்திய காட்டுத்தீயில் 90 சதவீதம் அதிகமானவை அணைக்கப்பட்டு விட்டதாக ஈவோ மெரேலஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.