அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ முன்பைவிட வேகமாக பரவி வரும் நிலையில், காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பிரேசில் ராணுவம் இறங்கியுள்ளது. கடை...
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ முன்பைவிட வேகமாக பரவி வரும் நிலையில், காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பிரேசில் ராணுவம் இறங்கியுள்ளது. கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை போராடி காட்டுத் தீயை அணைப்போம் என பிரேசிலின் பழங்குடி மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.
அமேசான் காடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க பிரேசில் அரசு போராடி வருகிறது. கால்நடைப் பண்ணைகள் வைத்திருப்பவர்களும், மரம் வெட்டுபவர்களும் தங்களது சுயநலத்திற்காக வைக்கும் தீ தான் அமேசான் காடுகளை அழித்து வருகிறது.
பிரேசலில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ், ஃபின்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளது. இப்பிரச்னையை பிரேசில் அரசு கையாண்ட விதம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் பணிக்கு ராணுவத்தை அனுப்ப பிரேசில் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரேசிலின் ராணுவமும் களத்தில் இறங்கியுள்ளது. விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மூலம் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. காட்டுத் தீயை அணைக்க மதிநுட்பங்களுடன் செயல்பட்டு வரும் பிரேசிலின் பழங்குடி மக்கள், கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை போராடி தீயை அணைப்போம் என உறுதி பூண்டுள்ளனர்.
அமேசான் காட்டுத் தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மற்றும் சா பாலோ நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர், தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். காட்டுகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் இப்பிரச்னையை கிளப்ப உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அமேசான் காட்டுத் தீயை அணைக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரேசில் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தீயை அணைக்க தேவையான உதவியை செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமேசான் காடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க பிரேசில் அரசு போராடி வருகிறது. கால்நடைப் பண்ணைகள் வைத்திருப்பவர்களும், மரம் வெட்டுபவர்களும் தங்களது சுயநலத்திற்காக வைக்கும் தீ தான் அமேசான் காடுகளை அழித்து வருகிறது.
பிரேசலில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ், ஃபின்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளது. இப்பிரச்னையை பிரேசில் அரசு கையாண்ட விதம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் பணிக்கு ராணுவத்தை அனுப்ப பிரேசில் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரேசிலின் ராணுவமும் களத்தில் இறங்கியுள்ளது. விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மூலம் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. காட்டுத் தீயை அணைக்க மதிநுட்பங்களுடன் செயல்பட்டு வரும் பிரேசிலின் பழங்குடி மக்கள், கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை போராடி தீயை அணைப்போம் என உறுதி பூண்டுள்ளனர்.
அமேசான் காட்டுத் தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மற்றும் சா பாலோ நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர், தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். காட்டுகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் இப்பிரச்னையை கிளப்ப உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

அமேசான் காட்டுத் தீயை அணைக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரேசில் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தீயை அணைக்க தேவையான உதவியை செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.