ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது. வவுனிய...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஈரோஸ் (ஈழவர் ஜனநாயக முன்னனி) கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவுக்கு சார்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பது, கோட்டபாயவுக்கு தமிழ் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொள்ளல், இரு கட்சிகளும் இணைந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, இந்திக்க அனுரத்த, சப்பிரகமுகா மாகாண முதலமைச்சர் மகேபால ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸவின் இணைப்பாளர் தேவப்பிரிய அபயசிங்க, வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால, ஈரோஸ் கட்சியின் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் செயலாளர் வே.நகுலேஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பரினர் சசிதரன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன், ஈழவர் ஜனநாயக கட்சியின் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஈரோஸ் (ஈழவர் ஜனநாயக முன்னனி) கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவுக்கு சார்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பது, கோட்டபாயவுக்கு தமிழ் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொள்ளல், இரு கட்சிகளும் இணைந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, இந்திக்க அனுரத்த, சப்பிரகமுகா மாகாண முதலமைச்சர் மகேபால ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸவின் இணைப்பாளர் தேவப்பிரிய அபயசிங்க, வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால, ஈரோஸ் கட்சியின் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் செயலாளர் வே.நகுலேஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பரினர் சசிதரன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன், ஈழவர் ஜனநாயக கட்சியின் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.