இரணைமடு குளத்தின் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியதை அடுத்து இன்று (23) நண்பகல் வரையில் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குளத்தை அடுத்து உ...
இரணைமடு குளத்தின் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியதை அடுத்து இன்று (23) நண்பகல் வரையில் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
குளத்தை அடுத்து உள்ள பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இரணைமடு குளத்தின வான் கதவுகள் படிப்படியாக திறக்கப்படுவதாக கிளிநொச்சி இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.
இன்று காலை 5.00 மணியளவில் குளத்தின் வான் கதவுகளைத் திறக்கும் பணி ஆரம்பமானது. இந்த பிரதேசத்தில் தற்பொழுது சீரான காலநிலை நிலவுகின்றது. இருப்பினும் மாங்குளம் வவுனியா போன்ற பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது. அங்கு இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்து, குளத்தின் நீர்மட்டம் 36 அடியை எட்டும் நிலையை அடைந்ததையடுத்து இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டது.
கண்டாவளை, கரைச்சி, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு வான் கதவுகள் திறக்கப்படுவது தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தாகவும், இதனால் எந்தவித பாதிப்பும் எவருக்கும் ஏற்படவில்லை என்று தெரிவித்தது.
குளத்தை அடுத்து உள்ள பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இரணைமடு குளத்தின வான் கதவுகள் படிப்படியாக திறக்கப்படுவதாக கிளிநொச்சி இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.
இன்று காலை 5.00 மணியளவில் குளத்தின் வான் கதவுகளைத் திறக்கும் பணி ஆரம்பமானது. இந்த பிரதேசத்தில் தற்பொழுது சீரான காலநிலை நிலவுகின்றது. இருப்பினும் மாங்குளம் வவுனியா போன்ற பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது. அங்கு இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்து, குளத்தின் நீர்மட்டம் 36 அடியை எட்டும் நிலையை அடைந்ததையடுத்து இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டது.
கண்டாவளை, கரைச்சி, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு வான் கதவுகள் திறக்கப்படுவது தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தாகவும், இதனால் எந்தவித பாதிப்பும் எவருக்கும் ஏற்படவில்லை என்று தெரிவித்தது.