சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க வலியுறுத்தி சாவகச்சேரியில் இன்று (27) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் அரசுக்கட்சியின...
சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க வலியுறுத்தி சாவகச்சேரியில் இன்று (27) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் அரசுக்கட்சியின் உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டது.
இதன் போது சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை என்ன வேடிக்கை பார்க்கிறதா, வளத்தை வனாத்தரமாக்கும் வனத்திணைக்களம் எதற்காக, தமிழர் தாயகத்தைப் பாலைவனமாக்கப் போகிறீர்களா, மண் மாபியாக்களை வளர்ப்பதா அரசின் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
மணல் அகழ்வை நிறுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் அரசுக்கட்சியின் உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டது.
இதன் போது சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை என்ன வேடிக்கை பார்க்கிறதா, வளத்தை வனாத்தரமாக்கும் வனத்திணைக்களம் எதற்காக, தமிழர் தாயகத்தைப் பாலைவனமாக்கப் போகிறீர்களா, மண் மாபியாக்களை வளர்ப்பதா அரசின் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
மணல் அகழ்வை நிறுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.