சாமியார் நித்யானந்தா அமெரிக்காவிலுள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அவரை கைது செய்ய பொலிஸார் தீவிரம் காட்டி...
சாமியார் நித்யானந்தா அமெரிக்காவிலுள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அவரை கைது செய்ய பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாலியல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தா, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைதளத்தில் தோன்றி காணொளி வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட காணொளியில் கைலாசாவை அமைத்தே தீருவேன் என்று முழங்கியிருந்தார். நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் பெங்களூர் பொலிஸாருக்கு விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் நித்யானந்தா அமெரிக்காவிலுள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுவதால் அவரை கைது செய்ய பொலிஸார் தீவிரம் காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலியல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தா, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைதளத்தில் தோன்றி காணொளி வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட காணொளியில் கைலாசாவை அமைத்தே தீருவேன் என்று முழங்கியிருந்தார். நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் பெங்களூர் பொலிஸாருக்கு விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் நித்யானந்தா அமெரிக்காவிலுள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுவதால் அவரை கைது செய்ய பொலிஸார் தீவிரம் காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.