யாழில் இன்று முதல் பொலிசார் மற்றும் விசேட அதிரடைப்படையினரின் உதவியுடன் மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவட...
யாழில் இன்று முதல் பொலிசார் மற்றும் விசேட அதிரடைப்படையினரின் உதவியுடன் மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக யாழ் மாவட்ட பிரதி போலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளினான மணல் அகழ்வு, ரௌடிகளின் வாள் வெட்டு, கொள்ளைக் கும்பல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு, பொலிசார், அதிகாரிகள், சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24) இடம்பெற்றது. கலந்துரையாடலில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் முக்கியமாக சட்டவிரோத மண் அகழ்வு, வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மற்றும் வழிப்பறி போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், மணல் கொள்ளை நடைபெறும் இடங்களின் அந்தந்த பிரதேச செயலர்கள் நமக்கு அடையாளம் காட்டினால் அந்தந்த இடத்தில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மணல் கொள்ளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக யாழ் மாவட்ட பிரதி போலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளினான மணல் அகழ்வு, ரௌடிகளின் வாள் வெட்டு, கொள்ளைக் கும்பல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு, பொலிசார், அதிகாரிகள், சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24) இடம்பெற்றது. கலந்துரையாடலில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் முக்கியமாக சட்டவிரோத மண் அகழ்வு, வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மற்றும் வழிப்பறி போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், மணல் கொள்ளை நடைபெறும் இடங்களின் அந்தந்த பிரதேச செயலர்கள் நமக்கு அடையாளம் காட்டினால் அந்தந்த இடத்தில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மணல் கொள்ளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.