முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் கூட்டணி உருவாக்கப் பணிகள் தொடர்ந்து தாமதமடைந்து வருகிறது. கூட்டணிக்குள் வர...
முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் கூட்டணி உருவாக்கப் பணிகள் தொடர்ந்து தாமதமடைந்து வருகிறது. கூட்டணிக்குள் வருமென எதிர்பார்க்கப்பட்ட பல தரப்புக்கள் பின்னடித்து வருவதால், கூட்டணி விவகாரம் இழுபறியில் இருப்பதாக தெரிகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்குகிறோம், அனைத்து தரப்பினரையும் இணைத்த பரந்த அணியாக கூட்டணி அமையுமென விக்னேஸ்வரன் தரப்பில் சொல்லப்பட்டு வந்தாலும், நடைமுறையில் அப்படி செயற்படவில்லை.
தற்போதைய நிலையில், விக்னேஸ்வரன் தரப்பாக செயற்பட்ட சில தரப்புக்கள் கூட, அந்த கூட்டணியில் இணைய தயாராக இல்லையென தெரிய வருகிறது.
தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், தமிழ் தேசிய கட்சி ஆகிய நான்கு தரப்புக்கள் மாத்திரமே இப்பொழுது புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள் என அறிகின்றோம் .
அனந்தி தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் தொடக்க நிகழ்வு பல மாதங்களின் முன்னர் விரல் விட்டு எண்ணத் தக்கவர்களுடன் நடந்தது. அதன்பின்னர் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ரெலோவின் யாழ்ப்பாண கிளையிலிருந்து பிரிந்த சிலர் என்ற அளவிலேயே, தமிழ் தேசிய கட்சி உள்ளது. ஒரு வலுவாக மக்கள் அமைப்பை கட்டியெழுப்பும் நம்பிக்கையை அந்த கட்சியின் மூத்தவர்கள் இதுவரை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆகவே, எதிர்காலத்திலும் அதற்கு வாய்ப்பில்லையென துணிந்து சொல்லலாம். கட்சியில் இருப்பவர்களில் கணிசமானவர்கள் இளைஞர்கள் என்பதால், அவர்களின் நடவடிக்கையை தற்போது கணிப்பிட முடியாது. எனினும், அடுத்த பொதுத் தேர்தலின் முன்பாக அவர்கள் வெகுஜன மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
தமிழ் மக்கள் கூட்டணியும் விக்னேஸ்வரன் என்ற பிம்பம், மற்றும் அருந்தவபாலனின் ஆதரவு தளம் என்பவற்றை மட்டுமே நம்பியதாக உள்ளது. அதற்கப்பாலான எந்த முயற்சியையும், நடவடிக்கையையும் அதனால் செய்ய முடியவில்லை. அரச உத்தியோகம், பாதுகாப்பான வாழ்கை, ஓய்வு நேர அரசியல் என்ற யாழ்ப்பாண மைய சிந்தனை கொண்டவர்களின் தமிழ் மக்கள் பேரவை போன்ற சில அமைப்புக்களின் பிடியில் விக்னேஸ்வரனும், கட்சியும் சிக்கியுள்ள நிலையில், கணிசமான மாற்றத்தையோ, மக்கள் வலையமைப்பையோ அவர்களாலும் உருவாக்க முடியவில்லை.
தற்போதைய நிலையில், அந்த கூட்டணியில் அதிகபட்சமாக, மக்களை நோக்கிய கட்டமைப்பை ஈ.பி.ஆர்.எல்.எவ்தான் கொண்டிருக்கிறது. எனினும், அதுவும் படிப்படியாக தனது வாக்கு வங்கியை இழந்து வரும் கட்சியாகவே உள்ளது.
சில பொதுஅமைப்புக்கள் இந்த கூட்டணியில் இணையவுள்ளன. எனினும், செயற்பாட்டு ரீதியாக பலமான பொதுஅமைப்புக்கள் இதில் இணையவில்லையென்பதை தமிழ்பக்கம் அறிந்தது. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை தக்க வைக்க பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள் மரபுரிமை பேரவையை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், அதுவும் வெற்றியளிக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையினர் இதற்கான பேச்சுக்களை நடத்தியபோதும், எந்த அரசியல் கூட்டணிக்குள்ளும் தம்மை அடையாளப்படுத்த விரும்பவில்லையென மரபுரிமைப் பேரவை தெளிவாக தெரிவித்துள்ளதாக அறிகின்றோம் .
வடமாகாணசபை காலத்தில் விக்னேஸ்வரனுடன் நெருக்கமாக இருந்த பொ.ஐங்கரநேசன் இந்த கூட்டணியில் இணைய மாட்டார் என தெரிகிறது. இந்தக் கூட்டணியில், அதிகபட்ச ஆட்களை திரட்டி தேசிய மாநாட்டை நடத்திய கட்சி அவரது கட்சி மாத்திரமே.
இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியை இணைத்துக் கொள்வது தொடர்பாக, வீ.ஆனந்தசங்கரியுடன் என்.சிறிகாந்தா பேச்சு நடத்தியிருந்தார். எனினும், அது அவரை கூட்டணிக்குள் கொண்டு வருமளவிற்கு ஆழமானதாக கூட்டணிக்குள் நடக்கவில்லை.
தைப்பொங்கலிற்கு முன்னதாக கூட்டணி விவகாரத்தை இறுதி செய்ய தீர்மானித்துள்ள, அந்த தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். தம்மை விட்டு வெளியில் நிற்கும் தரப்புக்கள் இறுதிநேரத்தில் இணைந்து கொள்ளும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்குகிறோம், அனைத்து தரப்பினரையும் இணைத்த பரந்த அணியாக கூட்டணி அமையுமென விக்னேஸ்வரன் தரப்பில் சொல்லப்பட்டு வந்தாலும், நடைமுறையில் அப்படி செயற்படவில்லை.
தற்போதைய நிலையில், விக்னேஸ்வரன் தரப்பாக செயற்பட்ட சில தரப்புக்கள் கூட, அந்த கூட்டணியில் இணைய தயாராக இல்லையென தெரிய வருகிறது.
தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், தமிழ் தேசிய கட்சி ஆகிய நான்கு தரப்புக்கள் மாத்திரமே இப்பொழுது புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள் என அறிகின்றோம் .
அனந்தி தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் தொடக்க நிகழ்வு பல மாதங்களின் முன்னர் விரல் விட்டு எண்ணத் தக்கவர்களுடன் நடந்தது. அதன்பின்னர் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ரெலோவின் யாழ்ப்பாண கிளையிலிருந்து பிரிந்த சிலர் என்ற அளவிலேயே, தமிழ் தேசிய கட்சி உள்ளது. ஒரு வலுவாக மக்கள் அமைப்பை கட்டியெழுப்பும் நம்பிக்கையை அந்த கட்சியின் மூத்தவர்கள் இதுவரை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆகவே, எதிர்காலத்திலும் அதற்கு வாய்ப்பில்லையென துணிந்து சொல்லலாம். கட்சியில் இருப்பவர்களில் கணிசமானவர்கள் இளைஞர்கள் என்பதால், அவர்களின் நடவடிக்கையை தற்போது கணிப்பிட முடியாது. எனினும், அடுத்த பொதுத் தேர்தலின் முன்பாக அவர்கள் வெகுஜன மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
தமிழ் மக்கள் கூட்டணியும் விக்னேஸ்வரன் என்ற பிம்பம், மற்றும் அருந்தவபாலனின் ஆதரவு தளம் என்பவற்றை மட்டுமே நம்பியதாக உள்ளது. அதற்கப்பாலான எந்த முயற்சியையும், நடவடிக்கையையும் அதனால் செய்ய முடியவில்லை. அரச உத்தியோகம், பாதுகாப்பான வாழ்கை, ஓய்வு நேர அரசியல் என்ற யாழ்ப்பாண மைய சிந்தனை கொண்டவர்களின் தமிழ் மக்கள் பேரவை போன்ற சில அமைப்புக்களின் பிடியில் விக்னேஸ்வரனும், கட்சியும் சிக்கியுள்ள நிலையில், கணிசமான மாற்றத்தையோ, மக்கள் வலையமைப்பையோ அவர்களாலும் உருவாக்க முடியவில்லை.
தற்போதைய நிலையில், அந்த கூட்டணியில் அதிகபட்சமாக, மக்களை நோக்கிய கட்டமைப்பை ஈ.பி.ஆர்.எல்.எவ்தான் கொண்டிருக்கிறது. எனினும், அதுவும் படிப்படியாக தனது வாக்கு வங்கியை இழந்து வரும் கட்சியாகவே உள்ளது.
சில பொதுஅமைப்புக்கள் இந்த கூட்டணியில் இணையவுள்ளன. எனினும், செயற்பாட்டு ரீதியாக பலமான பொதுஅமைப்புக்கள் இதில் இணையவில்லையென்பதை தமிழ்பக்கம் அறிந்தது. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை தக்க வைக்க பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள் மரபுரிமை பேரவையை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், அதுவும் வெற்றியளிக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையினர் இதற்கான பேச்சுக்களை நடத்தியபோதும், எந்த அரசியல் கூட்டணிக்குள்ளும் தம்மை அடையாளப்படுத்த விரும்பவில்லையென மரபுரிமைப் பேரவை தெளிவாக தெரிவித்துள்ளதாக அறிகின்றோம் .
வடமாகாணசபை காலத்தில் விக்னேஸ்வரனுடன் நெருக்கமாக இருந்த பொ.ஐங்கரநேசன் இந்த கூட்டணியில் இணைய மாட்டார் என தெரிகிறது. இந்தக் கூட்டணியில், அதிகபட்ச ஆட்களை திரட்டி தேசிய மாநாட்டை நடத்திய கட்சி அவரது கட்சி மாத்திரமே.
இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியை இணைத்துக் கொள்வது தொடர்பாக, வீ.ஆனந்தசங்கரியுடன் என்.சிறிகாந்தா பேச்சு நடத்தியிருந்தார். எனினும், அது அவரை கூட்டணிக்குள் கொண்டு வருமளவிற்கு ஆழமானதாக கூட்டணிக்குள் நடக்கவில்லை.
தைப்பொங்கலிற்கு முன்னதாக கூட்டணி விவகாரத்தை இறுதி செய்ய தீர்மானித்துள்ள, அந்த தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். தம்மை விட்டு வெளியில் நிற்கும் தரப்புக்கள் இறுதிநேரத்தில் இணைந்து கொள்ளும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.