நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவின் முன்னாள் இயக்குநர், மூத்த டி.ஐ.ஜி.ரவி வைத்தியலங்கரவிற்குமிடைய...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவின் முன்னாள் இயக்குநர், மூத்த டி.ஐ.ஜி.ரவி வைத்தியலங்கரவிற்குமிடையிலான தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது.
புதிய சிங்கள அமைப்பு இந்த உரையாடலை இன்று வெளியிட்டது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை விளக்கமறியலில் வைக்கப்பட்டது குறித்து அதில் பேசப்பட்டது. எனினும், அதில் அழுத்தம் கொடுக்கும் விதமாகவோ அல்லது வேறு அதிகார மீறலாகவோ அந்த உரையாடல் அமையவில்லை.
இதேவேளை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான பி அறிக்கையை பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவிலிருந்து ரஞ்சன் அதில் கோரியுள்ளார். அதை வழங்குவது சட்டமீறல் என ரவி வைத்தியலங்கர மறுத்தபோது, அதை உத்தியோகபூர்வமாக அல்லாமல், இரகசியமாக தருமாறு ரஞ்சன் கோரயுள்ளார்.
அரை மணித்தியாலத்தின் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரி கூறுவதுடன் அந்த உரையாடல் முடிந்தது.
புதிய சிங்கள அமைப்பு இந்த உரையாடலை இன்று வெளியிட்டது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை விளக்கமறியலில் வைக்கப்பட்டது குறித்து அதில் பேசப்பட்டது. எனினும், அதில் அழுத்தம் கொடுக்கும் விதமாகவோ அல்லது வேறு அதிகார மீறலாகவோ அந்த உரையாடல் அமையவில்லை.
இதேவேளை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான பி அறிக்கையை பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவிலிருந்து ரஞ்சன் அதில் கோரியுள்ளார். அதை வழங்குவது சட்டமீறல் என ரவி வைத்தியலங்கர மறுத்தபோது, அதை உத்தியோகபூர்வமாக அல்லாமல், இரகசியமாக தருமாறு ரஞ்சன் கோரயுள்ளார்.
அரை மணித்தியாலத்தின் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரி கூறுவதுடன் அந்த உரையாடல் முடிந்தது.