சவுதி அரேபியாவிலிருந்து புறப்பட்ட லயன் எயார் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்திலிருந்து உயிரிழந்த இரண்டு ...
சவுதி அரேபியாவிலிருந்து புறப்பட்ட லயன் எயார் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்திலிருந்து உயிரிழந்த இரண்டு இந்தோனேஷிய பிரஜைகளின் சடலங்கள் கட்டுநாயக்க பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜித்தா விமான நிலையத்திலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திற்கு சென்ற விமானமே தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இரண்டு பயணிகள் மயக்கமடைந்து விட்டனர் என தெரிவித்து, அவசரமாக தரையிறக்க விமானி அனுமதி கோரினார். இதையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானத்தை, வைத்தியர்கள் பரிசோதித்ததில், மயக்கமடைந்திருந்த இரண்டு பயணிகளும் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
77ஈ 64 வயதான இந்தோனேஷிய பெண்களே உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் தற்போது, நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜித்தா விமான நிலையத்திலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திற்கு சென்ற விமானமே தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இரண்டு பயணிகள் மயக்கமடைந்து விட்டனர் என தெரிவித்து, அவசரமாக தரையிறக்க விமானி அனுமதி கோரினார். இதையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானத்தை, வைத்தியர்கள் பரிசோதித்ததில், மயக்கமடைந்திருந்த இரண்டு பயணிகளும் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
77ஈ 64 வயதான இந்தோனேஷிய பெண்களே உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் தற்போது, நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.