உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவுக்கு வந்த நிலையில் சிறந்த மாடுபிடி வீரராக தெரிவான ரஞ்சித் குமாருக்கு கார் ப...
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவுக்கு வந்த நிலையில் சிறந்த மாடுபிடி வீரராக தெரிவான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.
மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் இந்தப் போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அத்துடன் 739 காளைகள் பங்கேற்றன.
இதில், 16 காளைகளைப் பிடித்த ரஞ்சித்குமார் சிறந்த மாடுபிடி வீரராக தெரிவானார். அத்துடன் 14 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாம் இடத்தையும் 13 காளைகளை அடக்கிய கணேசன் என்பவர் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைதந்திருந்தனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காணும் பொங்கல் தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.
மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் இந்தப் போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அத்துடன் 739 காளைகள் பங்கேற்றன.

இதில், 16 காளைகளைப் பிடித்த ரஞ்சித்குமார் சிறந்த மாடுபிடி வீரராக தெரிவானார். அத்துடன் 14 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாம் இடத்தையும் 13 காளைகளை அடக்கிய கணேசன் என்பவர் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைதந்திருந்தனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.