பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து சந்தேக நபரொருவரை மிக மோசமாக தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்...
பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து சந்தேக நபரொருவரை மிக மோசமாக தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நபரொருவருடன் முரண்பட்டார் எனும் குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மிக மோசமாக தாக்கியுள்ளார். அதில் கையில் வெடிப்பு ஏற்பட்டு குருதி வந்த நிலையிலும் மிக மோசமாக தாக்கியுள்ளார்.
சந்தேக நபர் தாக்குதலுக்கு இலக்காகி குருதிக் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் அவரை மருத்துவ மனையில் அனுமதிக்காது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் நிலை குறித்து அவதானித்த நீதிவான் அது தொடர்பில் சந்தேக நபரிடம் வினாவிய போது , தன்னை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதனை அடுத்து சந்தேக நபரை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் , உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நபரொருவருடன் முரண்பட்டார் எனும் குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மிக மோசமாக தாக்கியுள்ளார். அதில் கையில் வெடிப்பு ஏற்பட்டு குருதி வந்த நிலையிலும் மிக மோசமாக தாக்கியுள்ளார்.
சந்தேக நபர் தாக்குதலுக்கு இலக்காகி குருதிக் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் அவரை மருத்துவ மனையில் அனுமதிக்காது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் நிலை குறித்து அவதானித்த நீதிவான் அது தொடர்பில் சந்தேக நபரிடம் வினாவிய போது , தன்னை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதனை அடுத்து சந்தேக நபரை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் , உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.