வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலுக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தொழிலாளர் களை எதிர்வரும் 6ஆம் திகதியுடன் அவர்களது மாவட்டங்களுக்கே அனுப்ப...
வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலுக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தொழிலாளர் களை எதிர்வரும் 6ஆம் திகதியுடன் அவர்களது மாவட்டங்களுக்கே அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோர் மற்றும் வெளிமாவட்டங் களில் இருந்து வருகை தந்தோர் எனப் பலரும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கின் மத்தி யில் சொந்த ஊர் திரும்ப முடியாது அகப்பட்டுள்ளனர்.
இவர்களில் முதல் கட்டமாக கூலி வேலைக ளின் நிமித்தம் வந்து உறவுகளையும் பிரிந்து தொழில் இன்றித் தவிப்பவர்கள் உடன் கவனத்தில் எடுக்கப்படவுள்ளனர். கூலிவேலைக்காக வருகை தந்தவர்களில் சுமார் 300 பேர் தங்கியுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 6ஆம் திகதியளவில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நோய் தொற்று அறிகுறியற்றவர்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ள என்னாலும் மாவட்டச் செயலரினாலும் விடுத்த கோரிக்கை படைத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்வரும் 7ஆம் திகதியளவில் தத்தமது மாவட்டங்களுக்கு திரும்ப வாய்ப்புள்ளது- என்றார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோர் மற்றும் வெளிமாவட்டங் களில் இருந்து வருகை தந்தோர் எனப் பலரும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கின் மத்தி யில் சொந்த ஊர் திரும்ப முடியாது அகப்பட்டுள்ளனர்.
இவர்களில் முதல் கட்டமாக கூலி வேலைக ளின் நிமித்தம் வந்து உறவுகளையும் பிரிந்து தொழில் இன்றித் தவிப்பவர்கள் உடன் கவனத்தில் எடுக்கப்படவுள்ளனர். கூலிவேலைக்காக வருகை தந்தவர்களில் சுமார் 300 பேர் தங்கியுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 6ஆம் திகதியளவில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நோய் தொற்று அறிகுறியற்றவர்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ள என்னாலும் மாவட்டச் செயலரினாலும் விடுத்த கோரிக்கை படைத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்வரும் 7ஆம் திகதியளவில் தத்தமது மாவட்டங்களுக்கு திரும்ப வாய்ப்புள்ளது- என்றார்.