முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸார் வ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
நேற்றுக் காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நடைபெற்ற மகளீர் தின நிகழ்வில் அன்னை பூபதியின் உருவப்படத்துடன், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே மேற்படி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.