வவுனியாவில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய கனமழை காரணமாக 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொ...
வவுனியாவில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய கனமழை காரணமாக 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்றிரவு பெய்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக வவுனியாவில் இரண்டு பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்மைய வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதங்குளம், ஒமந்தை, வேலன்குளம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதிகளும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அவுரம்துலாவ, அவுசதப்பிட்டிய ஆகிய பகுதிகளிலும் உள்ள 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிப்படைந்த வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூபாய் பத்தாயிரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.