நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு ஏழு பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்த...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இரவு ஏழு பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569 ஆக காணப்படுகின்றது.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளான 449 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.