ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்க் ஆகியோருக்கிடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இந...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்க் ஆகியோருக்கிடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவலை தடுப்பது மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் தங்கியுள்ள சீனப் பிரஜைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்தமைக்கு அரசாங்கத்திற்கும் இலங்கை மக்களுக்கும் சீன ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் பரவலை இலங்கைக்குள் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொருளாதாரம் , சுற்றுலா உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கும் கொழும்பு துறைமுகம் போன்ற திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் சீனாவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது தெரிவித்துள்ளார்.