இலங்கை கிரிகெட் அணியில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீரர்கள் நாளை முதல் பயிற்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது...
இலங்கை கிரிகெட் அணியில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீரர்கள் நாளை முதல் பயிற்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளின் கீழ், பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வீரர்களைக் கொண்ட குழு கொழும்பில், 12 நாள் தங்கவைக்கப்பட்டு பயிற்சிகளுக்கு ஈடுப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இதன்போது பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சாளர்களின் உடல் நிலை மிகவும் உற்சாகத்துடன் இருக்க வேண்டிய காரணத்தினாலேயே, முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அத்துடன், பயிற்சியில் ஈடுபடும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் மேலும் குறிப்பிட்டுள்ளது.