இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பரிசோதனையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட...
இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பரிசோதனையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 45 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையை சேர்ந்த 2 பேர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையை சேர்ந்த ஒருவர், முல்லைத்தீவு ஆதாரவைத்தியசாலை சேர்ந்த ஒருவர்,
தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையை சேர்ந்த ஒருவர், காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையை சேர்ந்த 30 பேர், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 9 பேரென 45 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.