சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான தேர்தல் ஒத்திகை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது...
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான தேர்தல் ஒத்திகை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த மாதிரி வாக்களிப்பு மதியம் 12 மணிக்கு நிறைவுற்றது.
இந்த ஒத்திகை நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் நாயகம், யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், பிரதேச செயலர், சுகாதார அதிகாரிகள், பொலிசார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.