யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியில் காலம் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் இராமராசா மயூரனின் நினைவாக இரத்ததான முகாம் இடம்பெற்றது. ச...
யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியில் காலம் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் இராமராசா மயூரனின் நினைவாக இரத்ததான முகாம் இடம்பெற்றது.
சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர் நா.கௌரிமலர் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டு இரத்ததானத்தினை வழங்கினர்.
சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி உத்தியோகத்தராக திறம்பட செயற்பட்டிருந்த இராமராசா மயூரன் கடந்த நான்காம் மாதம் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்திருந்தார் அவரின் நினைவாக இன்றைய தினம் குறித்த வைபவம் சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கி உத்தியோகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.