ஜனாதிபதியின் கையொப்பம் மற்றும் அவரது கடித தலைப்பு ஆகியவற்றை மோசடி செய்த 37 வயது நபரை கோட்டை நீதவான் ஜூன் 8 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட...
ஜனாதிபதியின் கையொப்பம் மற்றும் அவரது கடித தலைப்பு ஆகியவற்றை மோசடி செய்த 37 வயது நபரை கோட்டை நீதவான் ஜூன் 8 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மே 28 அன்று வங்கி முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜனாதிபதியின் கையொப்பம் மற்றும் கடிததலைப்பு ஆகியவற்றைக் கொண்ட பரிந்துரை கடிதத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து, வங்கியின் பணியில் இருந்து நிறுத்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (03) வங்கி வளாகத்தில் கலந்துரையாடலுக்கு சந்தேக நபரை அழைத்த முகாமையாளர் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கொழும்பு குற்ற புலனாய்வு பணியகத்திடம் ஒப்படைத்தார், அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் மேலதிக விசாரணையின்போது, சந்தேக நபர் தனது தனிப்பட்ட மடிக்கணினியை ஜனாதிபதியின் கையொப்பம் மற்றும் கடிததலைப்பு ஆகியவற்றை மோசடி செய்ய பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர் குருநாகலில் உள்ள சந்தேக நபரின் வீட்டை பொலீசார் ஆய்வு செய்ததோடு, ஆவணங்களை மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி மற்றும் பென் டிரைவையும் பறிமுதல் செய்தனர்.