யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நேற்று அதிகாலை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தால்...
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நேற்று அதிகாலை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த நபர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்வேலி மற்றும் கல்வியங்காட்டு பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.