சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் , பெண்வேட்பாளரான பவதாரணி ராஜசிங்கத்துடன் மற்றுமொரு வேட்பாளரான பரநிருபசிங்கம்...
சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் , பெண்வேட்பாளரான பவதாரணி ராஜசிங்கத்துடன் மற்றுமொரு வேட்பாளரான பரநிருபசிங்கம் வரதராஜசிங்கம் ஆகியோர் இணைந்த ஊடகசந்திப்பொன்று யாழ் ஊடகமையத்தில் நடைபெற்றது.
இதன்போது கட்சிசார் விடயங்கள் வலியுறுத்தபட்டதை தொடர்ந்து பவதாரணி ராஜசிங்கம் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார். தொழில்சார் விடயங்களை முன்னிலைப்படுத்திய வினாவுக்கு விடைகூற முற்பட்டவர் பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும், கலைஞர்கள் அவர்களுக்கான வளர்சிக்கான வழிவகைகளை முன்னெடுப்பதுவும் தனது பிரதிநிதித்துவத்தை முன்வைத்ததற்கான நோக்கங்களிலொன்று என குறிப்பிட்டார்.