கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளிற்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வைத்தியசால...
கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளிற்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன், ஆயுதம் தாங்கிய பொலிசார், விமானப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, திருகோணமலையை சேர்ந்த ஒருவர் சில தினங்களின் முன்னர் அங்கிருந்து தப்பியோடினார். அருகிலிருந்த வீடுகளிற்குள் புகுந்து உடை, சைக்கிளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.
அவரது பொறுப்பற்ற நடத்தையினால், பல பகுதிகள் அபாயத்திற்குள்ளாகின. அவர் மீது தற்போது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐடிஎச் வைத்தியசாலையில் 39 பேர், வெலிக்கந்த வைத்தியசாலையில் 40 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீர்கொழும்பு, முல்லேரிய வைத்தியசாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.