மகிந்த தேசப்பிரிய
பொது தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் ஓக்ஸ்ட் மாதம் 6 ஆம் திகதி மாலை தேநீர் இடைவெளிக்கு முன்னர் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்களும் இந்த கலந்துரையடாலில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலில் அஞ்சல்மா அதிபர், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், மருத்துவ சபையின் பேராசிரியர் மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்து கொண்டிருந்தனர்.
வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் தொற்று நீக்குவது தொடர்பில் இதன்போது அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பது மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.