தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்று காலை யாழ் ஊடக அ...
தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்று காலை யாழ் ஊடக அமையத்திற்கு வருகை தந்திருந்தார்.
ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய அவர் அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
உயிரிழந்த ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை பார்வையிட்டு நடந்தவற்றை கேட்டறிந்து கொண்டார். அமையத்தில் உள்ள வளப்பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இவருடன் யாழ் மாவட்ட வேட்பாளர்களான கணேஸ்வரன் வேலாயுதம், கிருபாகரன், உமாச்சந்திர பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.